Songtexte.com Drucklogo

Uyirin Uyire Songtext
von G.V. Prakash Kumar

Uyirin Uyire Songtext

உயிரே உயிரே நீ வந்ததேனென்று தெரியாதே
உயிரே உயிரே நீ போவதெங்கென்று புரியாதே
எதுவும் எதுவும் நம் கையில் நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன் தன் அறிவில் வெல்லவும் இயலாதே

நாளை என்ன ஆகும் என்று
யாரும் சொல்ல முடியாதே
நாகரீக வாழ்வில் உள்ள
மோகம் மட்டும் குறையாதே

காணுகின்ற காட்சி எல்லாம்
உண்மை என்று ஆகாதே
காண போகும் மாற்றம் என்ன
யூகம் செய்ய கூடாதே ஹே

காட்சி மாறி போனாலும்
நம் கண்ணை விட்டு விலகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவை கொல்ல முடியாதே


காலை வேளையில் தோன்றும் சூரியன்
மாலை ஆனதும் சாய்ந்து தூங்குதே
மாலை வேளையில் தோன்றும் சந்திரன்
காலை வந்ததும் தேய்ந்து வீங்குதே

காணும் யாவுமே அவ்வாறே
மாறுகின்றதே மண் மேலே
மாறிடாமலே போனாலே நாம் ஏது
காதல் கொள்வது தீங்கானால்
நாமும் வந்தது எவ்வாறு
தேவை அனைத்தை தேடாமல் வாழ்வேது

காட்சி மாறி போனாலும்
நம் கண்ணை விட்டு விலகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவை கொல்ல முடியாதே

எல்லை கோடுகள் நூறு உள்ளன
எந்த கோட்டிலே நாமும் நிற்பதோ
பள்ளம் மேடுகள் பாதை ஆயின
எந்த பாதையில் நாமும் செல்வதோ


யாரும் அற்ற ஊர் தீவை போல்
நாமும் வாழ்வுதான் நன்றாகும்
ஒன்று கூடிய ஊர்தானே பூலோகம்
யாரும் யாரையும் சாராமல்
வாழ்வை வெல்லுதல் ஆகாதே
தனித்து வாழ்வதில்
உன் ஜென்மம் தீராதே

காட்சி மாறி போனாலும்
நம் கண்ணை விட்டு விலகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவை கொல்ல முடியாதே

உயிரே உயிரே நீ வந்ததேனென்று தெரியாதே
உயிரே உயிரே நீ போவதெங்கென்று புரியாதே
எதுவும் எதுவும் நம் கையில் நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன் தன் அறிவில் வெல்லவும் இயலாதே

நாளை என்ன ஆகும் என்று
யாரும் சொல்ல முடியாதே
நாகரீக வாழ்வில் உள்ள
மோகம் மட்டும் குறையாதே

காணுகின்ற காட்சி எல்லாம்
உண்மை என்று ஆகாதே
காண போகும் மாற்றம் என்ன
யூகம் செய்ய கூடாதே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Fans

»Uyirin Uyire« gefällt bisher niemandem.